Janu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தப்பளை ஹைபொரஸ்ட் குருந்து ஓயா தோட்டத்தில் வசிக்கும் உடப்புஸலாவ அலகொல தோட்டத்தை சேர்ந்த துரைசாமி சங்கர் (வயது 37) என்ற நபர் கடந்த 17.01.2024 திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக இவரின் வீட்டார் ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புத்தி சுவாதீனம் அற்ற இவரை தேடும் பணியில் ஹைபொரஸ்ட் பொலிஸார் ஈடுப்பட்டுள்ள நிலையில் இவரை கண்டவர்கள் இவர் தொடர்பான தகவலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஹைபொரஸ்ட் பொலிஸார் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இவரை கண்டவர்கள் இவர் தொடர்பான தகவலை 0767135932,என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆ.ரமேஸ்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .