2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உணவு விடுதியின் உரிமையாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா   

பதுளை, கோட்டகொடையிலுள்ள உணவு விடுதியில் இரு சாரருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் விடுதியின் உரிமையாளர் படுகாமயடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி உணவு விடுதிக்குள் இன்று(17) புகுந்த குழுவொன்று,  கடன் அடிப்படையில் உணவு பொருட்களை கேட்டுள்ளது. விடுதி உரிமையாளர் இதற்கு இணங்க மறுத்ததை தொடர்ந்து இரு சாரருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

மோதலில் விடுதி உரிமையாளர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .