2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

2015ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிவாரத்தை முன்னிட்டு, அக்குறணை பிரதேச சபை விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை உள்ளூராட்சிமன்ற வாரம் இடம்பெற உள்ளது. முதல் நாளான 7 ஆம் திகதி நடமாடும் சேவை தினமாகவும், 08 ஆம் திகதி வருமான அபிவிருத்தி தினமாகவும், 09 ஆம் திகதி சுகாதார தினமாகவும், 10 ஆம் திகதி கல்வி மற்றும் நூலக தினமாகவும், 11 ஆம் திகதி சுற்றாடல் தினமாகவும், 12 ஆம் திகதி மக்கள் தினமாகவும் இறுதி நாளான 13 ஆம் திகதி விளையாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது, அக்குறணை பிரதேச சபை பிரிவு முழுவதிலும் விரிவுப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதேச சபை தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .