Kogilavani / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை, ரத்துகொஹொதீகல பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி, கண்டி நீதவான்; நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கசிப்பு தயாரிக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அந்த வீட்டை முற்றிகையிட்ட பொலிஸார், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த வீட்டின் உரிமையாளரையும் மற்றொரு நபரையும் புதன்கிழமை (30) கைதுசெய்திருந்தனர்.
மேலும், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்திய 30,000 மில்லிலீற்றர் கோடா, 6000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago