Editorial / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
சட்ட விரோதமாக முறையில் மதுபானம் தயாரித்த நால்வரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார, இவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர் என்றார்.
கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாக தயாரித்த 20 லீட்டர் கசிப்பு, உட்பட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு 23 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட பொலிஸார், அவர்களை லிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago