2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கஞ்சா பயிரிட்ட ஐவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரட்னம் கோகுலன்    

தனமல்வில, தல்கஹாதிகன காட்டுப் பகுதியில் கஞ்சாப் பயிர்ச்செய்கை மேற்கொண்ட ஐவரை, செவ்வாய்க்கிழமை (05) பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கட்டுத்துப்பாக்கிகள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர். 

புத்தல விசேட அதிரடிப்படையினரால் அப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அங்கு 10 இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களிலிருந்த ஐவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். 

இவர்கள், கஞ்சாப் பயிர்ச் செய்கையை சேனைப் பயிர்ச் செய்கை முறைப்படி மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .