Kogilavani / 2017 மே 16 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், மாத்தளை, கொடுவேகெதர மற்றும் எம்.சிபொர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21,19 வயதுடைய இளைஞர்கள் இருவரை, மாத்தளை பொலிஸா, திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து, 2 கிராம் 320 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மாத்தளை, கொடுவேகெதர பாடசாலைக்கு அருகில், கஞ்சாவுடன் நடமாடித் திரிந்த இளைஞனை முதலில் கைதுசெய்த பொலிஸார், அவ் இளைஞனிடமிருந்து 1 கிராம் 480 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி இளைஞன் வழங்கியத் தகவலுக்கு அமைய மற்றைய இளைஞனையும் கைதுசெய்த பொலிஸார் அவ்விளைஞனிடமிருந்து, 840 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இவ்விருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026