2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த தாய் கைது

Niroshini   / 2017 மே 02 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

விற்பனை செய்வதற்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவரை ஊவா பரணகம பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

வெலிமடை - கட்டுகல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் இங்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே வீட்டின் சமையலறையில் இருந்து ஒரு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .