Editorial / 2024 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்புரை சிகிச்சை செய்தவர்களில் பலர் தங்களுடைய பார்வையை இழந்துவிட்டனர் என்றும் இதனால், பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
நுவரெலியா தேசிய வைத்தியசாலையில், ஜூலை 29 ஆம் திகதிக்கு பின்னர் கண்புரை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலர் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என அறியமுடிகிறது.
இது தொடர்பில் வைத்தியசாலையின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கிறோம்.
எனினும், கண்புரை சிகிச்சை செய்த 52 பேரில், சிலருக்கு இரண்டொரு நாட்களுக்கு மட்டுமே அவ்வாறான நிலைமை இருந்தது என்றும், இரண்டு நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களில் பலரின் பார்வை வழமைக்குத் திரும்பியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026