2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கற்கள் சரிந்தமையால் போக்குவரத்துக்கு இடையூறு

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

தலவாக்கலை, கெட்டபுலா கற்குவாரிக்கு அருகாமையில் நேற்று (27)  இரவு கற்கள் சரிந்து வீழ்ந்து, வீதியில் நீர் வடிந்தோடுவதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இ​தனை  சீர்செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலை நாட்டு பகுதியில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவனால், பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளடன், பல இடங்களில் ஒரு வீதியூடான போக்குவரத்தே காணப்படுகின்றன.

இதனால், இப்பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு, போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .