2024 மே 02, வியாழக்கிழமை

காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

Janu   / 2024 மார்ச் 04 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று  7 நாட்களாக காணாமல் போயிருந்த 79 வயதுடைய பெண்  இரத்தினபுரி - எரட்ன வீதியிலிருந்து  திங்கட்கிழமை  (04)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மல்சிறிபுர மதஹபொலவைச் சேர்ந்த 79 வயதான  ஜி.  மெகோ நோனா, என்ற  பெண் தனது குடும்பத்தாருடன்  கடந்த 23 ஆம் திகதி சிவனடி பாத மலை தரிசனம் செய்ய சென்றுள்ளார் . 

அதன்போது  , குறித்த பெண் கூட்டத்திலிருந்து காணாமல் போயுள்ளதுடன்  உறவினர்களால்  கண்டுபிடிக்க முடியாத  நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு  செய்துள்ளனர்  . 

இந்  நிலையில்  எரட்ண வீதியில் குறித்த  பெண்  இருப்பதாக  எரட்ண விகாரை பிக்கு  ஒருவர்  ஊர் மக்களுக்கு அறிவித்துள்ளதையடுத்து   தற்போது  அவரை   இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று வருகின்றார்.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .