2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான 9 பெண்கள்

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

பொகவந்தலாவ - மோரா மேல் பிரிவு தோட்டத்தில் இல-12ஆம் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான ஒன்பது பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய
அதிகாரி பஸ்நாயக்க தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .