2026 மே 07, வியாழக்கிழமை

குளவிக் கொட்டில் பெண் மரணம்; 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

 

பொகவந்தலாவ, பொகவான  பிரதேசத்தில், இன்று (24) காலை குளவிக் கொட்டுக்குள்ளான 62 வயது பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த  மேலும் 10  பெண்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த ராமய்யா வெல்லம்மா (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி 11 பேரும், தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றுத் தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம், பிரதேப் பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .