2025 ஜூலை 12, சனிக்கிழமை

கைகலப்பில் இருவர் காயம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை நகரில், சனிக்கிழமை மாலை கைகலப்பில் ஈடுபட்ட இருவர், படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலுள்ள பொது சந்தையில் வைத்தே இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனரென தெரியவருகிறது.

கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையே, இக்கைகலப்புக்குக் காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .