2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைதிகளுக்கு இடையே மோதல்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் சம்பவம்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலருக்கும், வேறு சில கைதிகளுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .