Kogilavani / 2021 மார்ச் 04 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, ஆர்.ரமேஸ், சுமணசிறி குணத்திலக்க
கொட்டகலை, பிபிலை ஆகிய பகுதிகளில், 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைவாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாhர பரிசோதகர் எஸ்.செந்தரராகவன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (3) மாலை வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைவாகவே, 16 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்து ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் இவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிபிலை மற்றும் மெதகம ஆகிய பொதுசுகாதார பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நால்வர் நேற்று (4) இனங்காணப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மெதகம கொட்போவ பிரதேசத்தில் பெண்ணொருவர் உட்பட மூவரும் பிபிலையில் ஒருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படி நால்வரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026