2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சமுர்த்தி கொடுப்பனவு பெற வந்தவர் கீழே விழந்து உயிரிழப்பு

Kogilavani   / 2021 மார்ச் 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

சமுர்த்தி முதியோர் கொடுப்பனவைப் பெறுவதற்காக வந்த வயோதிபர் ஒருவர், வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என்று, இராகலை பொலிஸார் தெரிவித்தனர். 

இராகலை - நுவரெலியா பிரதான வீதி, சமுர்த்தி வங்கிக்கு அருகில், இன்று (4) காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உடப்புஸ்ஸல்லாவை, கோடன் தோட்டத்திலிருந்து இராகலை நகருக்கு வந்த சந்தனம் சோமசுந்தரம் (வயது 76) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X