2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சிறுவனை வழிநடத்திய இளைஞன் கைது

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சமூக வலைதளமொன்றில், காணொளியொன்றைப் பதிவிடுவதற்கு, சிறுவனை விழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று (06) இளைஞனொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இரத்தினபுரி, வேவல்வத்தை – கலபட எனும் இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன், ஒரு புகைப்படப்பிடிப்பாளர் என்றும் சமூக வலைதள ஆர்வலர் என்றும் பொலிஸாரின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .