செ.தி.பெருமாள் / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்குக்கு யாத்திரை மேற்கொண்ட ஒருவர் தவறவிட்ட 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், நல்லதண்ணி பொலிஸாரால், அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தியகம்பர - கெட்டகதெனிய பகுதியைச் சேர்ந்த நபரொருவர், சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டுவிட்டு, நல்லதண்ணி - கங்குலதென்ன பகுதியிலுள்ள ஓய்வறையில் தங்கியிருந்த போது, தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஓய்வறையின் அதிகாரியொருவர், குறித்த பணப்பையைக் கண்டெடுத்து நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து, பணத்தைப் பொலிஸார், உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .