2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிவனொளிபாத மலையில் தீ பரவல்

Janu   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, லோயின்ஓன், சிவனொளிபாத மலை  காட்டு பகுதியில் புதன்கிழமை (20) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் , பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

அப்பகுதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சில குழுக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும்  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காமினி பண்டார


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X