2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

செனனில் 21 பேர் வெளியேற்றம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் செனன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக தோட்ட கிராம சேவகர் வழங்கி வருகிறார்.

மேற்படி தோட்டத்தில் ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலேயே அபாய வலயத்தில் இருந்த 6 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .