Janu / 2026 மார்ச் 24 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமத்தில் இருந்து செல்ல கதிர்காமம் நோக்கி பயணித்த சஃபாரி ஜீப் வண்டி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (23) அன்று இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் காமிணிபுர பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரான கே.ஏ. சந்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கதிர்காமம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கதிர்காமம் மகாசென் சுற்றுவட்ட சந்தியில் வைத்து ஜீப் வண்டியின் வலது பக்கத்தில் மோதி பலத்த காயமடைந்துள்ளதுடன் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க

10 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
48 minute ago