2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டொப்பாஸில் விழுந்த லொறி

Editorial   / 2023 மே 09 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.திவாகரன், டி.சந்ரு 

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று விழுந்து விபத்துக்குள்ளனாது.

குளியாப்பிட்டியவில் இருந்து  நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறியே பாரிய வளைவில் தடுப்பு வே​லியையும் உடைத்துக்கொண்டு தேயிலை தோட்டத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

 இதன்போது, லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர்களட இருந்துள்ளனர். எனினும், அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கிறனர்.  தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

​அவ்விடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .