2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தாய்ப்பால் பருகிய குழந்தை உயிரிழப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை, லொயினோன் தோட்டத்தில் தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விமலன் நவனீதன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னரே குழந்தை உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படும் என்று தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .