2024 மே 03, வெள்ளிக்கிழமை

தலைகீழாக மிதக்கும் பெண்ணின் சடலம்

Mayu   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ் , ஆ.ரமேஸ்,எஸ்.கௌசல்யா

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை ஓயாவிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று  (12) மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்க்கப்பட்ட சடலம்  இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு நுவரெலியா மாவட்ட நீதவான் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .