2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தாயின் விபரீத முடிவால் மூன்று பிள்ளைகளும் துடிக்கின்றனர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஷ

ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதுடன், அவரும் விஷமருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நால்வரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது தாயே தனது 6, 4, மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை பருக்கியுள்ளார்.

தனது குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளுக்கு விஷத்தை பருக்கி தானும் பருகியதாக தாய், வைத்தியசாலையில் தெரிவித்தார் என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதானி பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .