2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தாயின் விபரீத முடிவால் மூன்று பிள்ளைகளும் துடிக்கின்றனர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஷ

ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதுடன், அவரும் விஷமருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நால்வரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது தாயே தனது 6, 4, மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை பருக்கியுள்ளார்.

தனது குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளுக்கு விஷத்தை பருக்கி தானும் பருகியதாக தாய், வைத்தியசாலையில் தெரிவித்தார் என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதானி பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .