Kogilavani / 2021 மார்ச் 03 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்ட அதிகாரிகள், தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்ட அதிகாரிகள் பாதுகாப்புக்கு துப்பாக்கி கோரும் பட்சத்தில், தொழிலாளர்களும் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கிக் கோரினால் நிலைமை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொழிலாளர் உரிமைகளை மதித்து, தோட்ட நிர்வாகத்தை சரியான முறையில், சட்டத் திட்டங்களுக்கமைய முன்னெடுத்துச் செல்லும்பட்சத்தில் இவ்வாறான முட்டாள் தனமான கோரிக்கைகளை தோட்ட அதிகாரிகள் முன்வைக்க நேரிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் உரிமை என்பது மதிக்கப்பட வேண்டும் என்றும், பிரச்சினைகள் இருக்கும் பட்சடத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்வதே ஜனநாயக பண்பு எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களை வன்முறைக்கு இழுத்துவிடும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தோட்ட அதிகாரிகள், தொழிலாளர் மீது வன்முறையை திணிக்கும் பட்சத்தில், அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026