2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென்னை மரத்தில் ஏறிய தங்க வளையல்

Janu   / 2024 மார்ச் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பதுளை, மெதபத்தனை பகுதியில்  வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து  தங்க வளையல் ஒன்றையும்,  37,000 ரூபாய்  பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலொன்றிக்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார்  22 வயதுடைய  இளைஞன்  ஒருவரை  கைது  செய்துள்ளனர் .

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்  போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும்  பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார் .

மேலும்,  இச்சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர் .

பாலித  ஆரியவன்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .