2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற களஞ்சியசாலையில் திருட்டு

Kogilavani   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரயவன்ச

மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகளுடன் தொடர்புடைய உபரகணங்களை களஞ்சியபப்டுத்தப்படும் களஞ்சியசாலையில் வழக்குகொன்றுடன் தொடர்புப்பட்டு கைப்பறப்பட்ட மரம் அறுக்கு வாளை எடுத்து, வேறு ஒரு வழக்குடன் தொடர்புடைய லொறியொன்றில் மறைத்து வைத்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (25) நடைபெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நீதிமன்றத்தின் களஞ்சியசாலை உடைக்கபடாமல் எவ்வித சேமுமின்றி திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்றில் கடமைபுரியும் ஒருவரே செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.  

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .