Janu / 2026 ஜனவரி 11 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளுக்கு பலத்த சேதம். ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துவாரக்ஷான்


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago