2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நூலகத்தை மூடுவதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2021 மார்ச் 08 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை பொதுநூலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, நூலகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இன்று(8) வெளியான பிசிஆர் முடிவுகளுக்கு அமைவாகவே மேற்படி ஊழியருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X