2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளுப்பிட்டியவில் 10 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 மார்ச் 17 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா
 
பதுளை  பதுளைப்பிட்டிய பிரதேசத்தில், 10 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
 
மேற்படிப் பிரதேசத்தில், கடந்த 15 ஆம் திகதி 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானதற்கு அமைவாகவே, 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 
மேற்படி 10 பேருடன் தொடர்பைப் பேணிய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X