2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பலாங்கொடையில் 13 குடும்பங்கள் வெளியேற்றம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடையில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, பலாங்கொடை யத்தேஹிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், தோட்டத்திலுள்ள வணக்கஸ்தலங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, பலாங்கொடை பிரதேச செயலாளர் எச்.எம்.ஹேமந்த பண்டார தெரிவித்தார்.

யத்தேஹிகந்த பிரதேசத்தின் மேற்பகுதியிலிருந்து கற்பாறைகளுடன் மண்திட்டு வருவதால், இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டே, மேற்படி குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவதாக அவர் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .