2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பழைய தர்ம கர்த்தா மீண்டும் நியமிப்பு

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பாலித ஆரிய வங்ச

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமத் தேவாலயத்தின் தர்மகர்தாவாக ரஞ்சித் உதயகுமார திஸாநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், நேற்று வெள்ளிக்கிழமை (24), பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் நிமல் கெடவலகெதர முன்னிலையில் பதவியேற்றார்.

இப்பதவிக்கு, மஹியங்கனை சுமன சமன் தேவாலயத்தின் தர்மகர்தாவும் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பதியேற்பு வைபவத்தின் போது, கண்டி பௌத்த விகாரங்கள் ஆணையாளர் டீ.எம்.பீ.ஜயவர்த்தன, பதுளை மாவட்ட ஆண் பிரதேச செயலாளர்கள், மஹியங்கனை சுமன தேவாலய, பதுளை பத்தினி தேவாலய, சொரகுனே செல்லகதிர்காம தேவாலயம் ஆகிய கோயில்களின் தர்மகர்தாவாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .