2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்து

Yuganthini   / 2017 மே 11 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நகரில் இருந்து மறே தோட்டம் நோக்கி பயணித்த சிறிய ரக பேருந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து, நேற்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தமையும் அவர்களின் பொதிகளின் நிறை அதிகமாக இருந்தமையுமே இவ்விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .