Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேசத்தில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதோடு, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுடன் இணைந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்குறணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 400 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகள் தொடர்பாகவும் அதற்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும், அக்குறணை அஸ்னா பெரிய பள்ளிவாசலில், நேற்று முன்தினம் (07) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் ஹக்கீம், மேற்கண்டவாறு கூறினார்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026