Kogilavani / 2021 மார்ச் 07 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், யானைகள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளன என்று, ஹம்பேகமுவ வெஹெரயாய மக்கள், ஜீவகாருண்ய அமைப்புக்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை தனமல்வில வீதியை அண்மித்து அமைந்துள்ள நகர, கிராமப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வெஹெரயாய பற்றைக்காட்டுப் பகுதியில் கொட்டப்படுவதாகவும் இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளில், அதிகளவில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பட்டினியால் வாடும் யானைகள், மின்சார வேலிகளை உடைத்துக் கொண்டு கிராமத்தினுள் புகுந்து இந்தக் குப்பை மேட்டில் பொதிகளாகக் கட்டப்பட்டு ஒதுக்கப்படும் குப்பைகளை அவ்வாறே விழுங்கி விடுகின்றன என்றும் இதனால் உணவு சமிப்பாட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் யானைகள், நாளடைவில் உயிரிழக்கின்றன என்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
யானைகளின் மல எச்சங்களில், உயிருக்கு ஆபத்தை வி ளைவிக்கக் கூடியளவுக்கு மோசமான கழிவுகள் காணப்படுகின்றன என்றும் மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே இப்பிரச்சினையிலிருந்து யானைகளை மீட்டெடுப்பதற்கு, கழிவு முகாமைத்துவத்தில் முறையான திட்டமிடல்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள மேற்படி அமைப்பு துறைசார்ந்தவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026