2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மண்சரிவு அபாயம்; 16 குடும்பங்கள் வெளியேற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி பிரதேசத்தில் தொடர்ந்துபெய்து வரும் மழை காரணமாக, தேல பனகம பன்னிலந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இதனால், 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் நேற்று மாலை,  மலை உச்சியிலிருந்து பாரிய அளவிலான கற்கள், மரங்கள் மற்றும் மண்திட்டுகள் சரிந்து விழுந்துள்ளன.

மண்சரிவு காரணமாக பனகம பன்னில்கந்த பிரதேசத்தின் அருகில் அமைந்துள்ள புலுகாஹாதென்ன வித்தியாலயமும் மூடப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் பாடசாலையில் 400 மாணவர்கள் கல்லி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .