2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வை

Editorial   / 2020 மே 22 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

கினிகத்தேனை அல்லித் தோட்டம் இலக்கம் 4 பிரிவில், மண்சரிவு ஏற்பட்ட பகுதியை, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பார்வையிட்டார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப ரப்பர் சீட்களை இதன்போது வழங்கி வைத்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அல்லித்தோட்ட இலக்கம் மூன்று பிரிவின் தலைவர் கனகராஜிடம் இரப்பர் சீட் கையளிக்கப்பட்டது. 

அதேவேளை இந்தத் தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு தோட்ட முகாமையாளருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துரையாடவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .