Janu / 2025 நவம்பர் 19 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் காற்று காரணமாக, மஸ்கெலியா மோகா தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று விழுந்து, முச்சக்கர வண்டி சேதமடைந்த சம்பவம் புதன்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழும் போது முச்சக்கர வண்டியில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
நிலவும் மழை காரணமாக, 18 ஆம் திகதி மாலை பொகவந்தலாவ கிலாலி மற்றும் போகவான தோட்டப் பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகினர்.
எச்.எம். சுதத் ஹேவா

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago