2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாத்தளையில் 25 பேர் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 25 பேர் கடந்த நவம்பர் மாதத்தில்  மாத்தளை பொலிஸ் பிரிவுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மாத்தளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாத்தளை பகுதிக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நிலையம் ஒன்று, களுதாவளை- நரிகந்த பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டதுடன், இதன்போது பெண்ணொருவர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்​தேக நபர்களை  நீதிமன்றில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .