2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளையில் 51 தொற்றாளர்கள்

Gavitha   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஷ் கீர்த்திரட்ண

மாத்தளை மாவட்டத்தில், இன்று (01) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு 51 பேர் உள்ளாகியுள்ளனர் என, மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் 15 நோயாளர்கள் பதிவாகினர் என்றும் இன்று (01) காலை வரையான 24 மணித்தியாலயத்தில், எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாவட்டத்தில், இதுவரை 310 பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் மாத்தளை மாவட்டதைச் சேர்ந்த மூன்று நோயாளர்க வெளிமாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X