2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Freelancer   / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார்  பேருந்து ஒன்றுக்கு "C" தரம் அனுமதிப் பத்திரம் வழங்க 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற  அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காதினி நேற்று (20) மாலை உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய மாகாண பொது போக்குவரத்து திணைக்களத்தை சேர்ந்த நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான மாவட்ட முகாமையாளர் மற்றும் மேலும் ஒரு அதிகாரியை கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த லஞ்சம் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அதேநேரத்தில் சந்தேகநபர்களின் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி  சந்தேக நபர்களில் ஒருவரான மாவட்ட முகாமையாளருக்கு  சக்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை கருத்திற் கொண்டு  நோய்வாய்க்கு உள்ளான சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நிதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இவர்கள் தொடர்பான வழக்கை (04.03.2024) வரை ஒத்தி வைத்த நீதிபதி வழக்கு தினத்தில் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X