Sudharshini / 2016 மார்ச் 12 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமசந்திரன்
ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் நேற்று (11) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலா ஏற்றி வந்த பஸ்ஸூம், மேற்படி பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிலும் ஒன்றையொன்று முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
தம்புளை, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் பால் குளிரூட்டும் நிலையத்தருகிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புளை, பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago