Gavitha / 2021 மார்ச் 15 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனுக்கும் இடையில், நேற்று (15), பத்தரமுல்லையிலுள்ள அமைச்சின் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் மற்றும் சுகாதார ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்தப் பிரச்சினைகளுக்கு அமைச்சின் ஊடாக விரைவில் தீர்மானம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
மேலும், உயர்தரம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்துக்கொண்டு, தொழில் இல்லாமல் இருக்கும் மலையக இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago