2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விசேட சுற்றிவளைப்புகளில் 70 பேர் கைது

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் தலைமைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில், மதுபானம் அருந்திய நிலையில் வாகனங்களைச் செலுத்திய 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுக்கூடாக சுமார் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டத் தொகையை அபராதமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸார் அதிகாரி விஜிதத அல்விஸ், ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் பி.டபிள்யூ.எஸ்.பி.பலிபான ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .