2024 மே 02, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Mayu   / 2024 மார்ச் 05 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன பகுதியில் இன்று காலை (05) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த பேருந்து மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த இளைஞனும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் பயணித்த இ.போ.ச பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .