2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்

Kogilavani   / 2021 மார்ச் 22 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராஜா மலர்வேந்தன் 

மொனராகலை வீதி, மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில், நேற்று (22) முற்பகல் இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லொறியொன்றும் ஓட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஓட்டோ சாரதி உட்பட மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X