2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

வீடு தீக்கிரை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் கொலனியில், இன்று பகல் ஏற்பட்ட திடீர் தீயால், குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதென, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீயால் பெருமளவிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. மின்சார ஒழுக்கே தீ விபத்துக்குக் காரணமென சந்தேகிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .