2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வான் 120 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

மு.இராமச்சந்திரன்   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (15) காலை வான் ஒன்று 120 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வானில் 6 பேர் பயணம் செய்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட மூவர், விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .